குடியாத்தம், அக்டோபர் 12:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள் மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 92வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நலத்திட்டத்தின் மூலம் சுமார் 100 பேருக்கு அரிசி, பருப்பு, சேமியா, ரவை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கே.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் இ. நித்தியானந்தம் முன்னிலை வகித்தார்.
நிவாரணப் பொருட்களை சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் வழங்கினார்.
இதில் மேல்மூட்டுகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்,
ஐ.ஜே.கே. கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி,
வருவாய் ஆய்வாளர் புகழரசன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குமார்,
அ.தி.மு.க நிர்வாகி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
📰 செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா
குடியாத்தம், அக்டோபர் 12:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள் மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 92வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நலத்திட்டத்தின் மூலம் சுமார் 100 பேருக்கு அரிசி, பருப்பு, சேமியா, ரவை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கே.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் இ. நித்தியானந்தம் முன்னிலை வகித்தார்.
நிவாரணப் பொருட்களை சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் வழங்கினார்.
இதில் மேல்மூட்டுகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்,
ஐ.ஜே.கே. கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி,
வருவாய் ஆய்வாளர் புகழரசன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குமார்,
அ.தி.மு.க நிர்வாகி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
📰 செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா
