அக்டோபர் 4 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
குடியாத்தம் நகரில் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 121ஆவது பிறந்தநாள் விழாவும், புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகர கிளை சார்பில் அப்பு சுபையர் வீதியில் உள்ள வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றது.
அதேபோல், தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் எஸ். ரமேஷ் தலைமை தாங்கினார்.
மண்டலச் செயலாளர் பி. சரவணன், ஆர்.வி. மூர்த்தி, பட்டு வி. பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் சசிகுமார், வெங்கடேசன், உமாமகேஸ்வரி, பெயிண்ட் செந்தில், முரளி, கன்னியப்பன், சுந்தரமூர்த்தி, சுந்தர்ராஜ், செல்வம், மோகன் குமார், சரத்குமார், ஆறுமுகம், ஹேமந்த் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்