Sun. Oct 5th, 2025



சென்னை அரும்பாக்கம், செப்.17:

அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்னவ கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் K8 ஆய்வாளர் திரு. பாலசுப்ரமணியம், அலெர்ட் என்.ஜி.ஓ. சார்பில் திரு. நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி தொடர்பான அவசியம், அவசர நிலை கையாளும் முறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

மேலும் கல்லூரியின் முக்கிய துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இதில் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர். உயிர் காப்பு அறிவை மேம்படுத்தும் நோக்கில் இவ்வகுப்பு பயனுள்ளதாக அமைந்தது.

— தமிழ்நாடு டுடே நிருபர், மீரான்

By TN NEWS