🎓 கல்வி சிறப்பு அறிக்கை:
📰 ஆசிரியர் தகுதி தேர்வு – நீதிமன்ற தீர்ப்பு & தமிழக அரசின் நிலை:
தென்காசி, செப்டம்பர் 6:
சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகள், தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்புகள் குறித்து ஆசிரியர் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து தென்காசி மாவட்ட நிருபர் அமல்ராஜ் வழங்கிய விளக்கம் பின்வருமாறு:
🔹 நீதிமன்ற தீர்ப்பு – நடைமுறைப்படுத்தும் பாதை:
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு முதலில் சம்பந்தப்பட்ட அரசுக்கு அனுப்பப்படும்.
அரசு, சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று,
மேல்முறையீடு செய்யலாமா?
மறுசீராய்வு மனு தாக்கலா?
நேரடியாக நடைமுறை படுத்தலாமா?
என முடிவு செய்யும்.
நடைமுறைப்படுத்த முடிவு செய்த பிறகே, தீர்ப்பு அரசாணை (GO) ஆக மாறும்.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், அறிவிப்புகள் துறை ரீதியாக வெளியிடப்படும்.
🔹 தகுதி தேர்வு – தற்போதைய நிலை:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தாள்-1 மற்றும் தாள்-2 தகுதி தேர்வுகள்:
👉 புதிய பணி தேடுபவர்களுக்கானவை.
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எழுத வேண்டிய கட்டாயம் இல்லை.
எழுதலாமா வேண்டாமா என்பது ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பம்.
இந்தத் தேர்வுக்கும், நீதிமன்ற தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
🔹 வட்டார கல்வி அலுவலகங்களின் தகவல் சேகரிப்பு.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் எண்ணிக்கையை கேட்டுள்ளனர்.
இதன் நோக்கம்:
👉 தமிழகத்தில் இன்னும் எத்தனை பேருக்கு தகுதி தேர்வு தேவை என்பதை புள்ளி விவரமாக அறிந்து கொள்ளுதல்.
இது உடனடி பணி நீக்கத்திற்காக அல்ல என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔹 ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவுரை.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன், யாரும் வதந்திகளில் நம்பிக்கை வைக்கக் கூடாது.
தேவையற்ற மன அழுத்தத்திற்கோ, குழப்பத்திற்கோ ஆளாக வேண்டாம்.
தமிழக அரசு வெளியிடும் அறிவிப்பின் பிறகு தான், மாநில அளவிலான அமைப்பு தங்களின் தெளிவான முடிவை அறிவிக்கும்.
✍️ கருத்து:
ஆசிரியர்கள் தற்போது கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்ட பிறகே, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் ஒருமித்த கருத்து.
தொகுப்பு:
அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர்
தமிழ்நாடு டுடே செய்திகள்