பொன்னேரி அருகே விபத்து – பயணிகள் உயிர் தப்பினர்
பொன்னேரி:
பொன்னேரி அருகே இன்று நடந்த சாலை விபத்தில், அரசுப் பேருந்து சாலையோரத்தில் சறுக்கி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து விபத்தில் சிக்கிய சமயத்தில் உள்ளே இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து உடனே வெளியேறியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் பயணிகள் உயிர் தப்பியது ஓர் அதிர்ஷ்டமாகும் என அப்பகுதி மக்கள் கூறினர்.
📌 திருச்சி மாவட்ட ரிப்போர்ட்டர்: ராமர்