Wed. Jul 23rd, 2025


*பழனிச்சாமிநகரிலுள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.*

*அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கவும் சப்- கலெக்டர் பரிந்துரை.*

*இதுகுறித்து 51.முறைகள் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.*

*இது தொட‌ர்பாக தொடர்ச்சியாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்திருந்தார்.*

*அதன் பேரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக வைக்கப்பட்டிருந்த அறவிப்பு பலகையை மர்ம நபர்கள் அகற்றியது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென திருப்பூர் வருவாய் கோட்டாச்சியர் கு.மோகன சுந்தரம் அவர்கள் திருப்பூர் வடக்கு வட்டாச்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக புகாரளித்த ஈ.பி.அ.சரவணனுக்கு வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.*

அதில் திருப்பூர் மாவட்டம் – திருப்பூர் பூலுவப்பட்டி – போயம்பாளையம் பிரிவு, 5/1551 நேரு நகர் என்ற முகவரியை சார்ந்த திரு.ஈ.பி.அ.சரவணன் என்பவர் – திருப்பூர் மாநகராட்சிகுட்பட்ட 2 ·வது மண்டலம் 8- வது வார்டு வடக்கு வட்டத்திலுள்ள பி.என்.ரோடு ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட போயம்பாளையம் பஸ் நிறுத்தம் வடபுரம் பழனிச்சாமி நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு சொந்தமானது என வருவாய் துறை அறிவிப்பு பலகை வைத்ததை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார். மேற்காணும் மனு அசலாக இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
மேற்கண்ட மனு தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விபரத்தினை மனுதாரருக்கு நேரிடையாக தெரிவிக்குமாறு திருப்பூர் வடக்கு வட்டாட்சியரை கேட்டுக்கொள்ளப்படுகிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் சரவணக்குமார்.

By TN NEWS