Wed. Dec 17th, 2025

திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி.

வேலூர் மாவட்டம், டிசம்பர் 11:
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, குடியாத்தத்தில் அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

குடியேற்றம் கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கழக தலைவர் கே. எம். ஜி. ராஜேந்திரன் தலைமையேற்றார். நிறுவனர் ஜே. கே. என். பழனி, செயலாளர் வழக்கறிஞர் கே. எம். பூபதி, பொருளாளர் கே. எம். சிவக்குமார், நெறியாளர் கே. எம். ஜி. சுந்தரவதனம், இணைச் செயலாளர் புலவர் தமிழ் திருமால், மூத்த வழக்கறிஞர் சு. சம்பத்குமார், இயற்கை வேளாண்மை ஆர்வலர் சிவசங்கரன், சுரேஷ் பாபு, சிவனேசன், செந்தில்குமார், தயாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மகாகவியை நினைவுகூர்ந்தனர்.

பாரதியார் வழித்தோன்றலான விழிப்புணர்வும் தேசிய உணர்வும் புதிய தலைமுறைக்கு எட்ட வேண்டும் என்பதே இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS