Fri. May 8th, 2026

இராமநாதபுரம் நவம்பர் 22:
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்களின் தலைமையில், காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள் பலர் முன்வந்து இரத்த தானம் செய்தனர்.

மேலும், இதுவரை 12 முறை இரத்த தானம் செய்துள்ள ஆயுதப்படை காவலர் R. சரவணபாண்டியன் அவர்களின் சமூகப் பணி பாராட்டத்தக்கது என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

செந்தில்குமார்
மாவட்ட செய்தியாளர்

By TN NEWS