Mon. Jan 12th, 2026

ஆண்டிப்பட்டியில் கைப்பம்பு பழுதடைந்து ஒரு வருடமாக நீர் தட்டுப்பாடு – பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியின் தெற்கு தெருவில் உள்ள கைப்பம்பு கடந்த ஒரு வருடமாக பழுதடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் நீர் தட்டுப்பாட்டால் அவதிய преж்சிற்றனர்.

கைப்பம்பை சரிசெய்யும் பணிக்காக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலக மண்டல சிறப்பு அலுவலரிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

உடனடியாக பழுதடைந்த கைப்பம்பை சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட நிருபர் – க. ஏழுமலை (எ) பிரபு

By TN NEWS