1). பிடியாணை நிலுவையில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலையத்தில் ராஜாமணி(28) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இது தொடர்பாக இன்று 12-04.2025-ம் தேதி மேற்கண்ட பிடியாணையை நிறைவேற்றும் பொருட்டு தலைமறைவாக இருந்து வந்த எதிரி ராஜாமணியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
2.) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது.
திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமரானந்தபுரம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது அப்துல் ரபீக்(45) என்கின்ற நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தெரியவந்தது. மேற்கண்ட எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3.) சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்மியான் சாகிப் வீதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது பூமிநாதன்(38) மற்றும் ஆனந்தராஜ்(25) என்ற இரண்டு நபர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்படி எதிரிகள் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 180ML அளவுள்ள 03 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த பணம் ரூபாய் 5190/- பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
4.) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது.
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது ஐயப்பன்(54) என்கின்ற நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தெரியவந்தது. மேற்கண்ட எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5). தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
திருப்பூர் மாநகரம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சைசிங் மில் பேருந்து நிறுத்தம் அருகே 12.04.2025-ம் தேதி போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த பாலகிருஷ்ணன்(38) மற்றும் சசிகுமார்(33) ஆகிய இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து சுமார் 72.900 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேற்கண்ட இருவர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
6.) சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது.
திருப்பூர் மாநகரம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யம்பாளையம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது செந்தில்குமார்(34) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்படி எதிரி செந்தில்குமார் என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 180ML அளவுள்ள 27 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த பணம் ரூபாய் 200/- பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கண்ட எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்