Mon. Apr 20th, 2026

குடியாத்தம், ஏப்ரல் 19:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், தேசிய முற்போக்கு திராவிட கூட்டணி சார்பில் வெற்றி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில் இன்று காலை 7 மணி அளவில் 3 மற்றும் 10-வது வார்டுகளில் வீடு தோறும் சென்று, இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டன.

🗳️ வாக்குறுதிகள் – மக்களிடம் விளக்கம்.

பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டன:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2000 வழங்கும் திட்டம்

“அம்மா இல்லம்” திட்டத்தின் மூலம் வீடுகள்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள்

மகளிர் இருசக்கர வாகன திட்டம் – ₹25,000 மானியத்துடன்

இந்த வாக்குறுதிகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

👥 கலந்து கொண்டவர்கள்.

இந்த வாக்கு சேகரிப்பில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்:

3வது வட்ட செயலாளர் வி. சேகர்

பாஜக மாவட்ட நெசவாளர் அணி – பாலாஜி

புதிய நீதி கட்சி நகர செயலாளர் ஹரி

நகர செயலாளர் மணி

10வது வார்டு கழக செயலாளர் சிவகுமார்

நிர்வாகிகள் பாபு, தினகரன், வாழி

கழகப் பொறுப்பாளர்கள் ஜெயவேலு, வீராசாமி மற்றும் பலர்

📰 செய்தியாளர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS