Sun. Apr 5th, 2026

வேடசந்தூர், ஏப்ரல் 3

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்துள்ளனர்.

அஇஅதிமுக வேடசந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் V.P.B. பரமசிவம் (MBBS) அவர்களின் முன்னிலையில், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் டி.சி. ராஜ்மோகன் தலைமையிலும், அய்யலூர் பேரூர் கழக நகரச் செயலாளர் டி.சி.ஆர். ராகுல் பாபா ஒருங்கிணைப்பிலும், அய்யலூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மற்றும் மூன்று முறை தொடர்ந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம். தர்மலிங்கம் (தி.மு.க. நிர்வாகி) அவர்கள், 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அஇஅதிமுகவில் இணைந்தார்.

இந்த இணைவு, வேடசந்தூர் தொகுதியில் NDA கூட்டணிக்கு முக்கிய வலுசேர்ப்பாக பார்க்கப்படுகிறது.

By TN NEWS