Wed. Nov 19th, 2025

தருமபுரி (நவம்பர் 12):
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) SC துறையின் மாநிலத் தலைவர், திரு. எம்.பி. ரஞ்சன்குமார் அவர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரா. விக்ரமன் அவர்களை மாநில SC துறை மாநில செயலாளராக நியமித்துள்ளார்.

இந்நியமனத்தைத் தொடர்ந்து, இரா. விக்ரமன் அவர்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் உயர்திரு. சதீஷ், I.A.S. அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பில், SC துறை மாநில துணைத் தலைவர் சம்பத்குமார் (தருமபுரி),மாவட்டத் தலைவர்கள் மாதேஸ்வரன், தமிழ்வாணன்,பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி SC துறைத் தலைவர் சங்கீதா ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வு, தருமபுரி மாவட்டத்தில் SC/ST சமூக நலன் மற்றும் சமூக நீதிக்கான புதிய  தொடக்கமாக அமைந்துள்ளது.

📸 தகவல்: பசுபதி | அரசியல் பிரிவு செய்தி

By TN NEWS