Wed. Nov 19th, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி ஊராட்சியில் இன்று காலை சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமையேற்றார்.

ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எண்.இ. சத்யானந்தம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி, இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர். கணபதி, ஒன்றிய குழு உறுப்பினர் ரஞ்சித் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சரவணன், அங்கன்வாடி மேற்பார்வையாளர் கமலா, வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

செய்தி: குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS