Wed. Nov 19th, 2025



வங்க கடலில் புயல் சின்னம் உருவாகுவதால் இன்று சென்னை முதல் இராமநாதபுரம் வரையிலான கடலோர பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும்.

நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை தொடர் மிதமான மழை பெய்யும்.

கடலோர பகுதிகளை தவிர வேறு எங்குமே இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால் இன்று இரவு  முதல் தென் மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வீசும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். நெல்லை தென்காசியை பொறுத்தவரை அம்பாசமுத்திரம் தென்காசி செங்கோட்டை ராதாபுரம் நாங்குநேரி ஆகிய 5 தாலுகாவிலும் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை போல மழை தீவிரமடையும்.

Sources: Tenkasi Weatherman.

By TN NEWS