Tue. Oct 7th, 2025



அக்டோபர் 6 – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ (TAHDCO) திட்டத்தின் கீழ், ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி கட்டிடம் அமைக்கப்பட்டது.

இந்நவீன விடுதி கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், காணொளி காட்சி (Video Conference) வாயிலாக செஞ்சி பேரூராட்சியில் கட்டப்பட்ட மாணவியர் விடுதியை திறந்து வைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற விழாவில், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, மாணவியர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் ஊக்குவிப்புரைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, தாட்கோ செயற்பொறியாளர் அன்பு சாந்தி, செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் விடுதி காப்பாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: தமிழ். மதியழகன்
மாவட்ட முதன்மை செய்தியாளர் – விழுப்புரம்

By TN NEWS