Sun. Oct 5th, 2025

செப்டம்பர் 30, குடியாத்தம் (வேலூர் மாவட்டம்):

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் 2005-ஆம் ஆண்டுக்கான கல்லூரி கலைத் திருவிழா நிறைவு விழா இன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எபெனேசர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வேலூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் அ. மலர் பங்கேற்று மாணவர்களுக்கு உரையாற்றினார்.

 

கணிதத் துறை தலைவர் முனைவர் செ. கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் வ.க. சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

 

முதல்வர் தலைமையுரை ஆற்றியதையடுத்து, கல்வி இணை இயக்குனர் முனைவர் அ. மலர் சிறப்புரை வழங்கி, கலைவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் ஆற்றினர்.

 

துறைத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், பொறுப்பாளர்கள், முனைவர் ந. கெஜலட்சுமி, முனைவர் மு. மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இறுதியில் முனைவர் பா. தேவப்பிரியா நன்றியுரை ஆற்றினார்.

📌 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா

By TN NEWS