Sun. Oct 5th, 2025



வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மேலாளத்தூர் ஊராட்சியில் ரூ.14 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், பிரதம மந்திரி கிராம முன்னேற்றம் மற்றும் ஆதி திராவிடர் நல திட்ட நிதியில் 2022ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.14 லட்சத்தில் இந்த அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கட்டிடத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தி முருகானந்தம் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் வரவேற்றார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹானா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி செயலாளர் மோகன் நன்றி தெரிவித்தார்.

குடியாத்தம் செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS