Thu. Aug 21st, 2025

சென்னை, ஆக.20 –
திருப்பூரில் பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு உடனடி உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாதுகாப்பாக குழந்தை பிறக்கச் செய்த பெண் காவலர், செல்வி கோகிலா, தமிழ்நாடு காவல்துறை தலைமையிடம் பாராட்டுபெற்றார்.

கடந்த 16.08.2025 அன்று அதிகாலை 00.25 மணியளவில், திருப்பூர் வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனச் சோதனையில் பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் (படையெண்: 1065) கோகிலா, ஓடிசாவைச் சேர்ந்த பாரதி (25) என்பவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கடுமையான பிரசவ வலியில் இருப்பதை கவனித்தார்.

உடனடியாக ஆட்டோவில் ஏறிய கோகிலா, தனது முன் நர்சிங் பயிற்சி அனுபவத்தைக் கொண்டு, கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்தார். வலி அதிகரித்ததால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்க உதவினார். பின்னர் தாய் மற்றும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இருவரும் பாதுகாப்பாக திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த வீரத் தன்மையுடனான விரைவான நடவடிக்கைக்காக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், படைத்தலைவர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (20.08.2025) சென்னை தலைமை அலுவலகத்தில் செல்வி கோகிலாவை நேரில் அழைத்து, பாராட்டுச் சான்றிதழும் வெகுமதியும் வழங்கி பாராட்டினார்.

செய்தியாளர்: சரவணக்குமார், திருப்பூர் மாவட்டம்

 

By TN NEWS