Fri. Aug 22nd, 2025

சென்னை, ரிப்பன் மாளிகை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம், அவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என சென்னை மேயர் ஆர். பிரியா வேண்டுகோள் விடுத்தார்.

பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு கோரிக்கைகளை தூய்மை பணியாளர்கள் முன்வைத்த நிலையில், பேச்சுவார்த்தையில் பணி பாதுகாப்பு எப்போதுமே அவர்களுக்கு உண்டு என்றும், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“பணியில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம். மாநகராட்சிக்கு தூய்மை பணியாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என மேயர் கூறினார்.

அதேவேளை, அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாம் என்றும், மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.


சேக் முகைதீன்

இணை ஆசிரியர்.

 

By TN NEWS