வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாடி, மூங்கப்பட்டு ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், ஆகஸ்ட் 13 அன்று லட்சுமணபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆஷா செழியன், லதா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் மூங்கப்பட்டு, பெரும்பாடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மகளிர் உரிமைத் திட்டம், ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெற மனுக்கள் அளித்தனர்.
நிகழ்ச்சியில் பல துறை அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியின் 18 மற்றும் 35ஆம் வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், ஆகஸ்ட் 13 அன்று குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 35ஆம் வார்டு நகர மன்ற உறுப்பினர் கன்னிகா பரமேஸ்வரி, 18ஆம் வார்டு நகர மன்ற உறுப்பினர் மற்றும் பிறர் முன்னிலை வகித்தனர்.
நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத் திட்டம், ஓய்வூதியம், மின் இணைப்பு பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் போன்ற அரசு சலுகைகளைப் பெற பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
சிறப்பாக, மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக மனு அளித்தவருக்கு நிகழ்ச்சியிலேயே உடனடியாக பெயர் மாற்ற ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் புவியரசி, அர்ச்சனா நவீன், ஜி. எஸ். அரசு, எஸ். எஸ். பாண்டியன், வசந்தா ஆறுமுகம், முருகேசன், பல துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்