Fri. Aug 22nd, 2025

ஆகஸ்ட் 8

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கி பழனி தலைமை தாங்கினார்

வேளாண்மை துறை இன இயக்குனர் உமா சங்கர் முன்னிலையில் வகித்தார்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார்

இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதித்தனர்


குடியாத்தத்தில் கால்நடை சந்தை அமைக்க நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழி சாலைகளில் உள்ள சுற்றுச் சுவர்களை உயர்த்தி கட்ட வேண்டும்


அவசர தேவைக்காக கால்நடை மருத்துவர்கள் இரவு நேரங்களில் மருத்துவப் பணியில் ஈடுபட வேண்டும்


சேங்குன்றம் பகுதியில் உள்ள மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது அதை மாற்றி புதிய மின்கம்பிகள் அமைக்க வேண்டும்

தங்கம் நகர் நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள திடக் கழிவு திட்டத்தை வேற
இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்

நெல் கொள்முதல் களம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்

இக்கூட்டத்தில் தலைமை நில அளவர்
சுரேஷ் பாபு
ஆதிதிராவிடர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் ஜோதி இராமலிங்கம்
வனத்துறை அலுவலர் சுரேஷ்

கல்ல பாடி சுகாதார அலுவலர் டேவிட்

விவசாய சங்க பிரதிநிதிகள் சம்பத் நாயுடு கே சாமிநாதன துரைசெல்வம். எம் சேகர் பழனிவேலன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

இறுதியில் எழிலரசி நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

By TN NEWS