Fri. May 8th, 2026

அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக தொழிலாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

திண்டுக்கல் மாவட்டம்  அடுத்துள்ள டிரசரி காலனி, கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாஸ்கர் (43). தொழிலாளியான இவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த  தாடிக்கொம்பு காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த பாஸ்கரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக க்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் எஸ். சந்திரமோகன், திண்டுக்கல்

By TN NEWS