Tue. Apr 7th, 2026

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்ரல் 6:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள், இன்று பாப்பம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பகுதிக்கு வருகை தந்த வேட்பாளருக்கு பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், முதியவர்களிடம் ஆசி பெற்றும், இளைஞர்களுடன் கலந்துரையாடியும் ஆதரவை திரட்டினார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா கடத்தூர் EB அலுவலகம் அருகில் நடைபெற்றது.

காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில், முனைவர் பெ. பழனியப்பன் அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வே. பசுபதி
தமிழ்நாடு டுடே, மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி




By TN NEWS