🚀 எதிர்கால தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னேறும் முயற்சி…!
📍 திருச்சி மாவட்டம் துறையூர் அருகிலுள்ள புத்தனாம்பட்டியில் இயங்கி வரும் நேரு நினைவுக் கல்லூரியில், உலகளாவிய முக்கியத்துவம் பெறும் எக்ஸ்டெண்டெட் ரியாலிட்டி (XR) + டிஜிட்டல் ட்வின் (DT) தொழில்நுட்பத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
💡 XR + DT என்றால் என்ன?
🔹 இந்த தொழில்நுட்பம் மூலம்:
செயலிகளுடன் நேரடி தொடர்பு கொள்ளும் அனுபவம்
விரும்பிய அவதாரத்தை நேரில் காணும் வசதி
மெய்நிகர் உலகத்தை நிஜ உலகுடன் இணைக்கும் திறன்
👉 இதனால் பயனர் அனுபவம் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு செல்கிறது.
🌍 எதிர்காலத்தில் அதிக தேவை:
📈 உலகளவில் AI வளர்ச்சிக்கு துணைபுரியும் முக்கிய திறனாக XR + DT உருவெடுத்து வருகிறது.
🏢 நிறுவனங்களில் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளில் இந்த திறன்களுக்கு மிகுந்த தேவை உருவாகியுள்ளது.
🌾 விவசாயம் முதல் வரலாறு, கல்வி முதல் தொழில் வரை
👉 அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
🎯 மாணவர்களுக்கு நேரடி பயிற்சி:
👨🏫 மத்திய திறன் மேம்பாட்டு கழகத்தின் (MESC)
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் கழக மூத்த ஆலோசகர் சசிகுமார் சதாசிவம்
கடந்த ஒரு மாதமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கி வருகிறார்.
🏛️ கல்லூரி நிர்வாகம் விளக்கம்:
🎙️ கல்லூரி தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழக அரசு மார்ச் 12ஆம் தேதி இந்த தொழில்நுட்பத்திற்கான கொள்கையை அறிவித்துள்ளது
உலகளவில் முதல்முறையாக 6 மாத பாடத்திட்டமாக இந்த கோர்ஸ் அறிமுகம்
கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம்
📢 முக்கிய அம்சம்:
🔴 உலகளவில் முதல்முறையாக XR + DT தொழில்நுட்ப பாடத்திட்டம்
👉 தமிழகம் – புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தொடக்கம்!
✍️ செய்தியாளர்:
ஆர். மணி
திருச்சி மாவட்ட தலைமை நிருபர்
