குடியாத்தம், ஜனவரி 4:
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பலம்நேர் சாலை வர சக்தி விநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள டாக்டர் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ் மற்றும் சுவாசா மிர்தம் கம்பெனி ஆகியவற்றின் சார்பில், ஆத்மா, அலர்ஜி, சளி, சைனஸ் மற்றும் ஆர்த்தோ மூட்டு வலி தொடர்பான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் திரு. பி.எல்.என். பாபு தொடங்கி வைத்தார்.
இதில் அடுத்த ஆண்டு ரோட்டரி சங்கத் தலைவர் திரு. டி.எஸ். ரவிச்சந்திரன், டில்லி பாபு, செல்வராஜ், சாசமுத்திரம் கம்பெனி மேனேஜர் திரு. பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, “ப்ரீத் பிளஸ்” மற்றும் “ஆர்த்தோ பிளஸ்” மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த முகாமில் டாக்டர் பி. அபிராமி கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
✍️ குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
