பாரத ரத்னா விருது பெற்ற, முன்னாள் இந்தியப் பிரதமர், தேசத்தின் மாபெரும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா, தருமபுரி மாவட்டம் அரூர் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீர்த்தமலை சக்தி கேந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சி, தீர்த்தமலை சக்தி கேந்திரம் கிளைத் தலைவர்கள் ஹசினா, சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் திரு. G. இராசேந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தேசபக்தி, நல்லாட்சி, நேர்மை, மற்றும் வளர்ச்சி நோக்கிய அரசியல் பார்வை குறித்து உரையாற்றினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாவட்டத் தலைவர் திரு. C. குமார்,
தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் திரு. A.G. முருகன்,
ஒன்றிய துணைத் தலைவர் திரு. G. முருகன்,
ஒன்றிய மகளிர் அணி தலைவி திருமதி. மு. சித்ரா,
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தேச கட்டுமானத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவினை போற்றும் விதமாக, இந்த நிகழ்ச்சி கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.
வே. பசுபதி
தமிழ்நாடு டுடே
மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி
