Thu. Dec 18th, 2025


குடியாத்தம், டிசம்பர் 5:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

மௌன ஊர்வலத்துக்கு ஜே.கே.என். பழனி தலைமையேற்று வழிநடத்தினார்:

நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில்,
நகராட்சி அலுவலகத்தில் இருந்து மௌன ஊர்வலம் தொடங்கப்பட்டது.
சமூக ஒற்றுமை, அமைதி மற்றும் அவர்களின் மக்கள் நலப் பணிகளை நினைவுகூரும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது.

பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

ஊர்வலத்தில் பலரும் இணைந்தனர்:

கழக அமைப்பு செயலாளர் – வி. ராமு

மாவட்ட கழக துணை செயலாளர் – கஸ்பா ஆர். மூர்த்தி

நகர கழக தலைவர் – ஆர்.கே. அன்பு

முன்னாள் அரசு வழக்கறிஞர் – கே. எம். பூபதி

நகர மன்றத் துணைத் தலைவர் – பூங்கொடி மூர்த்தி

முன்னாள் நகர மன்றத் தலைவர் – அமுதா சிவப்பிரகாசம்

முன்னாள் துணை மன்றத் தலைவர் – எஸ்.டி. மோகன்ராஜ்

நகர பொருளாளர் – எஸ்.ஐ. அன்வர்பாஷா

முன்னாள் நகர மன்ற உறுப்பினர் – நித்யானந்தம்

நகர கழக துணை செயலாளர் – ஏ. ரவிச்சந்திரன்

நகர கழக இணை செயலாளர் – அமுதா கருணா

முன்னாள் மாவட்ட பிரதிநிதி – ஆர்.கே. மகாலிங்கம்

நகர மன்ற உறுப்பினர்கள் – லாவண்யா, குமரன், சிட்டிபாபு, தண்டபாணி

ஹார்டுவேர் ரவி, தென்றல் குட்டி, சேட்டு, கோணி ராமமூர்த்தி, ஜே. பாஸ்கர் உள்ளிட்ட பலர்.

அஞ்சலி & அன்னதானம்:

மௌன ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து
காமராஜர் பாலம் வழியாக சென்று, ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS