Thu. Feb 5th, 2026



தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிய மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில அமைப்பாளர் தலைவர் சீனிவாசன், மலர் தூவி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

ஜெ.ஜெயலலிதா அவர்களின் சாதனைகள் நினைவு கூறப்பட்டன:

அவர்களின் அரசியல் பயணம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை நினைவு கூறப்பட்டன:

1980களில் அரசியலுக்கு வருகை

எதிரிகளைக் கூட நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சலால் ‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

தொட்டில் குழந்தை திட்டம் மூலம் ஐ.நா.வின் பாராட்டைப் பெற்ற முதல் பெண் முதலமைச்சர்

பலமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார்

அதிமுக பொதுச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டார்


வே. பசுபதி
தலைமை செய்தியாளர்

By TN NEWS