Thu. Nov 20th, 2025

📍 கிருஷ்ணகிரி மாவட்டம்
🎯 பெண்களுக்கான தொழில் மேம்பாட்டு பயிற்சி – 3 நாட்கள் சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 3 நாட்கள் திறனுடன் கூடிய தொழில் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சியை கோவை CCRWD தொண்டு நிறுவனம் ஒருங்கிணைத்து செயல்படுத்தியது.
நிகழ்ச்சியை மாவட்ட திட்ட மேலாளர் சிவபாரத் துவக்கி வைத்தார்.

பயிற்சியின் போது சோப்பு தயாரிப்பு, ஷாம்பு தயாரிப்பு, சோப்பாயில் தயாரிப்பு ஆகியவற்றில் நடைமுறை விளக்கத்துடன் முரளி பார்கவி கெமிக்கல்ஸ் நிறுவனம் சிறப்பு பயிற்சி அளித்தது.

இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தொழில் முனைவுத் திறன்களைப் பயின்றனர்.

🖋️ செந்தில் ராஜா
தருமபுரி மாவட்டம்

By TN NEWS