Sun. Oct 5th, 2025

 


வேலூர் மாவட்டம் – செப்டம்பர் 29
குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக மாணவர்களுக்கான “காவல் செயலி அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது.

அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை வரவேற்புரை வழங்கினார்.
அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி விழாவைத் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. மயில் வாகனன், இ.கா.பா. அவர்களின் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை (CCW) அவர்களின் ஆலோசனை படியும், CIU, CAWS, JSR மற்றும் ACDC போலீசார் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு அமர்வில்:

சாதி, மதம், இன வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என்பதைக் கூறினர்.

வன்கொடுமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கினர்.

பெண்கள் உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, குழந்தை திருமணம் தடுப்பு காவல் செயலி, போக்சோ சட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.


சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்ந்த முத்துக்குமார், கவிதா, சுஜிமா, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு சார்ந்த கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

சுமார் 242 மாணவர்கள் இதில் கலந்துகொண்டு, குழந்தை திருமணம் காவல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், துறைத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இறுதியாக, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல் நன்றியுரை ஆற்றினார்.
அத்தி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சௌ. சுகநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS