மதுரை:
முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்த நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கில், முதலீட்டாளர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு படி, 2025 அக்டோபர் 8ஆம் தேதி வரை புகார் அளித்த முதலீட்டாளர்களுக்கு மட்டுமே, இழந்த தொகையை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எப்படி புகார் அளிப்பது?
நேரில்: அருகிலுள்ள காவல்துறையில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
மின்னஞ்சல் மூலம்: eowmadurai2@gmail.com என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம்.
மின்னஞ்சல் தெரியாதவர்கள்: அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் மின்னஞ்சல் அனுப்ப உதவி பெறலாம்.
ஏன் கட்டாயம் புகார் அளிக்க வேண்டும்?
முதலீட்டாளர்களின் கடுமையான உழைப்புப் பணத்தை ஏமாற்றி, சொத்து சேர்த்து வாழும் நியோமேக்ஸ் நிறுவன தரகர்கள் / பங்குதாரர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, புகாரளித்தவர்களின் பெயர்பட்டியல் அவசியம்.
முக்கிய எச்சரிக்கை:
காவல்துறையில் புகாரளிப்பது கட்டாயம்.
08 அக்டோபர் 2025க்குப் பின் அளிக்கப்படும் புகார்கள் கருதப்படமாட்டாது.
இது கடைசி வாய்ப்பு என்பதால், முதலீட்டாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“ஏமாற்றிய பணத்தை மீட்டெடுக்க, தாமதம் செய்யாமல் துரிதமாக புகார் அளியுங்கள் – கிடைத்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!”
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்