குடியாத்தம், செப்.17:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் ஊராட்சியில், மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், குடியாத்தம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆனந்தி முருகானந்தம், தாசில்தார் பழனி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
முகாமில் குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினர் பிரியா சக்திவேல், வளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கோடீஸ்வரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, வளத்தூர் வருவாய் ஆய்வாளர் புகழரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், அருள் பிரகாசம், காந்தி, ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, பெயர் மாற்றம், மின் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பொதுமக்களால் முகாமில் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் ரேவதி, துணைத் தலைவர் வாசுதேவன், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் வளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர், கே.வி. ராஜேந்திரன்