Sun. Oct 5th, 2025



குடியாத்தம், செப்டம்பர் 12:
குடியாத்தம் ராபின்சன் பூங்கா அருகே அத்தி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

இந்த முகாம், அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ. கென்னடி தலைமையிலான முகாமில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முகாமை துவக்கி வைத்து, நோயாளிகள் இவ்வாய்ப்பை பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

முகாமில் குடியாத்தம் முன்னாள் நகரமன்ற தலைவர் அமுதா சிவபிரகாசம், கவுன்சிலர் ஆர்.கே. அன்பு, அரிசி மண்டி ராஜேந்திரன், திருநாவுக்கரசு, போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர் ஆ. கென்னடி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சர்க்கரை நோய், மூட்டுவலி, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

மேலும், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் மகேஷ் ராஜாமணி, அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தி மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சரவணன் நன்றி உரையாற்றினார். மருத்துவ முகாமை அத்தி கல்விக் குழும அறங்காவலர் டாக்டர் எஸ். சுகநாதன் ஒருங்கிணைத்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS