வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பட்டு, ஒலக்காசி, அணங்காநல்லூர், கொத்தகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் சரவணன் தலைமையேற்றார். குடியாத்தம் ஒன்றிய குழுத் தலைவர் சத்யானந்தம் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முகாமில் குடியாத்தம் வட்டாட்சியர் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சூரியகலா, மனோஜ்குமார், ரஞ்சித் குமார், ஆனந்தி, நித்தியானந்தம், பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுஜானி, அலங்காநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் செண்பகவள்ளி முருகேசன், ஒலக்காசி ஊராட்சி மன்றத் தலைவர் சூரியகலா, கொத்தகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா, பெயர் மாற்றம், மின்சாரம் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர்கள், துணைத்தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம், சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
📰 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பட்டு, ஒலக்காசி, அணங்காநல்லூர், கொத்தகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் சரவணன் தலைமையேற்றார். குடியாத்தம் ஒன்றிய குழுத் தலைவர் சத்யானந்தம் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முகாமில் குடியாத்தம் வட்டாட்சியர் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சூரியகலா, மனோஜ்குமார், ரஞ்சித் குமார், ஆனந்தி, நித்தியானந்தம், பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுஜானி, அலங்காநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் செண்பகவள்ளி முருகேசன், ஒலக்காசி ஊராட்சி மன்றத் தலைவர் சூரியகலா, கொத்தகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா, பெயர் மாற்றம், மின்சாரம் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர்கள், துணைத்தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம், சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
📰 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்