குடியாத்தம், டிசம்பர் 28
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், மரியாதைக்குரிய ஜி.கே. வாசன் எம்.பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் புறநகர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக குடியாத்தத்தில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, குடியாத்தம் காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், டி.ஐ. பவுண்டேஷன் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஏழை எளியவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் பி.எல்.என். பாபு தலைமை தாங்கினார். நகர தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார்.
அனைவருக்கும் மாநில தேர்தல் பணி குழுத் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் எஸ். அருணோதயம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
மேலும், கங்காதரன், சதாசிவம், ராமு, மஞ்சு, விஜயன், ஹவுஸ் தம்பி உள்ளிட்டோர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம், டிசம்பர் 28
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், மரியாதைக்குரிய ஜி.கே. வாசன் எம்.பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் புறநகர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக குடியாத்தத்தில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, குடியாத்தம் காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், டி.ஐ. பவுண்டேஷன் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஏழை எளியவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் பி.எல்.என். பாபு தலைமை தாங்கினார். நகர தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார்.
அனைவருக்கும் மாநில தேர்தல் பணி குழுத் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் எஸ். அருணோதயம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
மேலும், கங்காதரன், சதாசிவம், ராமு, மஞ்சு, விஜயன், ஹவுஸ் தம்பி உள்ளிட்டோர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
