Wed. Nov 19th, 2025

 


இன்று (17.11.2025), திங்கட்கிழமை
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள்:

📍 மண்டலம் 6 – வார்டு 67, கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில்

கட்டப்பட்டு வரும் பெருநகர சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகம் (Division Office)

அதே பகுதியில் அமைந்து வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (UPHC)

📍 திரு. வி.க. நகர் சட்டமன்ற தொகுதி

சிஎம்டிஏ மேம்படுத்தி வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா (Murasoli Maran Park)

மேலே உள்ள அனைத்து திட்டங்களின் முன்னேற்றத்தையும் பணித் தரத்தையும் மேயர் அவர்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி

By TN NEWS