செப்டம்பர் 2, குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி மற்றும் தீப்பெட்டி அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் இன்று காலை 12 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர கழக செயலாளர் அண்ணன் ஜே. கே. என். பழனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவருடன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஹார்டுவேர் ரவி, எலக்ட்ரிக்கல் கருணா, குடியாத்தம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்
