குடியாத்தத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு!
குடியாத்தம், அக்டோபர் 8:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி பகுதியில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹயான் தலைமையேற்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரி சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் நதியா சின்னப்பன், ஒன்றிய பொருளாளர் பத்ரிநாத், மாவட்ட பிரதிநிதி கே. ரமேஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஆர். ஜீவா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன், கழக நிர்வாகிகள் டி.கே. பாபு, பீமராஜ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் மேற்பார்வையாளர் கமலா நன்றி கூறினார்.
🖋️ செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
📍 இடம்: குடியாத்தம்
