Sun. Oct 5th, 2025


வேலூர், அக்டோபர் 5:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தம் திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் குடியாத்தம் அரசு பொது மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. முகாம் APM மஹாலில் நடைபெற்றது.

குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் மாறன் பாபு மற்றும் வழக்கறிஞர் ரஜினி தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் முகாமை துவங்கி, முதலாவது நபராக ரத்ததானம் செய்தார்.

நிகழ்ச்சியில் வேலூர் உதவும் உள்ளங்கள் நிறுவன தலைவர் சந்திரசேகர் சிறப்புரை ஆற்றினார். நகர மன்ற உறுப்பினர்கள் புவியரசி, கன்னிகா பரமேஸ்வரி, மற்றும் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் தேவேந்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும், குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.சந்திரன், முன்னாள் தலைவர் Rtn.வாசுதேவன், சமூக ஆர்வலர் சிவ கலைவாணன், மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் விஜயகுமார் நன்றிபட தெரிவித்துள்ளார். குடியிருப்போர் நல சங்க செயலாளர் மற்றும் வேலூர் உதவுங்கள் குடியாத்தம் பொறுப்பாளர் Rtn.பிரேம்குமார் முகாமை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS