Sun. Oct 5th, 2025



குடியாத்தம், செப்டம்பர் 30:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் கல்லூரி கலை திருவிழா 2005 நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா கல்லூரி முதல்வர் ஜெ. எபெனேசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, வேலூர் மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் அ. மலர் அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கணிதத் துறை தலைவர் முனைவர் செ. கருணாநிதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, விலங்கியல் துறை தலைவர் முனைவர் வ.க. சிவக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர், கல்லூரி முதல்வர் தலைமை உரையாற்றி, கல்லூரியின் முன்னேற்றம் குறித்து விரிவாகப் பேசியார்.

இதையடுத்து நடைபெற்ற கலா நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆற்றிய மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

இவ்விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், பொறுப்பாளர்கள், முனைவர் ந. கெஜலட்சுமி, முனைவர் மு. மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியில், முனைவர் பா. தேவப்பிரியா அவர்கள் நன்றியுரை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.

📌 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS