Sun. Oct 5th, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தனியார் மண்டபத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் தலைமையேற்றார்.

சிறப்புரை ஆற்றியவர்களில் மாநில பொதுச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேசன், மாநில துணைத் தலைவர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் பெர்னான்டஸ் ரத்தினராஜா, மாநில துணைத் தலைவர் ஏசுதாஸ், முதன்மைச் செயலாளர் நிக்ஸன், மாநில பொருளாளர் சத்தியகுமார், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பால் தயாநிதி, மாநில அமைப்புச் செயலாளர் டேவிட் சலாமான் ஆகியோர் இடம்பெற்றனர்.

மேலும் குருசேகர தலைவர், வடக்குப்பற்றி மணிமாறன், தொகுதி செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டன. சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS