செப்டம்பர் 16, குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கருணீக சமுத்திரம், போஜனாபுரம், செம்பேடு ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், சரவணன் தலைமையில் முகாம் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதாகர் (கருணீக சமுத்திரம்), தனலட்சுமி ராஜ்குமார் (போஜனாபுரம்), யுவராணி சத்தியமூர்த்தி (செம்பேடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜியன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோடீஸ்வரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, வளத்தூர் வருவாய் ஆய்வாளர் புகழரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், அருள்பிரகாசம், காந்தி, ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில்:
மகளிர் உரிமைத் தொகை,
முதியோர் ஓய்வூதியம்,
இலவச வீட்டு மனை பட்டா,
மின் இணைப்பு பெயர் மாற்றம்,
குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் உள்ளிட்டவை அடங்கும்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், செயலாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம்