வேலூர் மாவட்டம், ஆகஸ்ட் 27:
குடியாத்தத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் அமைச்சூர் கபாடி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கபாடி விளையாட்டின் வளர்ச்சி, நடுவர் குழுவின் பங்கு, மற்றும் இளைஞர்களை கபாடி விளையாட்டில் ஈர்க்கும் வழிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், நடுவர்களின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அமைச்சூர் கபாடி கழக செயலாளர் கோபாலன், பொருளாளர் அம்மன் ரவி, துணைத்தலைவர் இராசி தலித் குமார், கண்வினர் நவமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கபாடி நடுவர்களான பாஸ்கர், சுந்தர், மோகன், குட்டி, சிவராமன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தை குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன் செய்தியாக வெளியிட்டுள்ளார்.