*கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாரயத்தை கண்டுபிடித்து அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை*
இன்று 11.10.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப.,* அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.குணசேகர் மற்றும் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வண்டகப்பாடி ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் அளவு பிடிக்கக்கூடிய 04 பேரல்களில் சுமார் 800 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 3 பிளாஸ்டிக் குடங்களில் இருந்த 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.