
வெள்ளகோவிலில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Vo
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கோவில் விழாவில் கலந்து கொண்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மணிகண்டன், பிரபாகரன் , தினேஷ் , சதீஷ் , பாலு , மோகன் , நந்தகுமார் மற்றும் நவீன் குமார் ஆகிய எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை காங்கேயம் மகளிர் காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அதற்கான ஆணையை வழங்கியதாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்